சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகள் பலன் அளித்துவருகின்றன: மத்திய அரசு

தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Updated On :12 ஜூன் 2013, 6:40 am

தங்கம் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துவருகின்றன என்று மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

புது தில்லியில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார பிரிவுச்

செயலர் அரவிந்த் மாயாராம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

கடந்த ஒரு வார காலத்தில் தங்கம் இறக்குமதி செய்வதற்காக அன்னிய செலாவணி பயன்படுத்தப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்பு, ஒரு நாளில் சராசரியாக, அதிகபட்சம் ரூ. 1,135 கோடி மதிப்பிலான அன்னிய செலாவணி தங்க இறக்குமதிக்காக தேவைப்பட்டது.

அது இப்போது ரூ. 225 கோடியாக குறைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ரூ. 38 கோடிக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கம் வாங்குவதற்கு அன்னிய செலாவணி பயன்படுவது வெகுவாக குறைந்துள்ளது பொருளாதார அளவில் நல்ல செய்தியாகும்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிக அளவில் இருப்பது மத்திய அரசை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதனை குறைக்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக தங்கம் இறக்குமதிகளுக்கான சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இறக்குமதிக்கான சுங்க வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வங்கிகள் தங்கம் இறக்குமதி செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

2012-2013 நிதி ஆண்டில் சராசரியாக ஒரு மாதத்தில் 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் நடப்பு 2013-2014 நிதி ஆண்டில் மாத சராசரியாக 152 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 75 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி இதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.