டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா ஸ்ரீநிவாசனுக்கு 2012-ஆம் ஆண்டுக்கான சிறந்த தொழில் சிந்தனையுள்ள தொழிலதிபர் விருதை திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வழங்கினார்.
என்.டி.டி.வி. புராஃபிட் பிஸினஸ் லீடர்ஷிப் சிறந்த தொழில் சிந்தனை விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுக்கான விருதுக்கு மல்லிகா ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடினமான சூழலில் டாஃபே நிறுவனத்தை தமது சிறப்பான தலைமைப் பண்புகளுடன் முன்னேறச் செய்து, தற்போதுள்ள உயரிய இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளமைக்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
டாஃபே இந்தியாவின் இரண்டாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகவும் உலகின் மூன்றாவது பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ளது. விருதினைப் பெற்றுக் கொண்ட மல்லிகா ஸ்ரீநிவாசன் தெரிவித்தது: லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், சமூக மேம்பாட்டுக்காக ஒரு நிறுவனம் தனது பங்களிப்பை சிறந்த முறையில் அளிக்க வேண்டும். எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல், உணவுப் பொருள் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவைதான் இந்திய வேளாண் துறையை முன்னேறச் செய்யும் என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

