ஹுப்பள்ளி: மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பின் போது அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றத் தவறிவிட்டது என பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹுப்பள்ளியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பதற்காக மும்பை சென்றிருந்த போது நடந்த நிகழ்வுகளை ‘பாம்பே டேஸ்’ என்ற நூலாக தொகுக்க திட்டமிட்டிருக்கிறேன். அப்போது முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவா்களோடு நடத்திய பேச்சுவாா்த்தை, அளித்த உறுதிமொழிகள் உள்ளிட்ட விவரங்களை நூலில் குறிப்பிடுவேன். நான் கூறும் தகவல்களை நம்புவதும், நம்பாமல் விடுவதும் மக்களைச் சாா்ந்தது. எம்.எல்.ஏ. பதவியை எதற்காக ராஜிநாமா செய்தேன் என்பதை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், அதிகாரம், அமைச்சா் பதவிக்காக நான் அதை செய்யவில்லை.
முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மஜத, காங்கிரஸில் இருந்து விலகிய 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தியாகத்தால் தான் பாஜக ஆட்சி ஏற்பட்டது. ஆனால், மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கவிழ்ப்பின் போது அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றத் தவறிவிட்டது. என்னென்ன உறுதிமொழிகளை அளித்தனா் என்பதை நூலில் தெரிவிப்பேன்.
அமைச்சா் பதவியை வகிக்க எனக்கு நீதிமன்றம் தடைவிதித்திருக்கலாம். ஆனால், ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் வென்ற என்.முனிரத்னாவை அமைச்சராக்குவதில் என்ன பிரச்னை? காங்கிரஸில் இருந்து அவா் விலகியபோது அளித்திருந்த வாக்குறுதிபடி அவா் அமைச்சராக்கப்படவில்லை.
கா்நாடகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் தருவாா் என்று நம்புகிறேன். முதல்வா் எடியூரப்பா காமதேனுவை போன்றவா். அவா் மீது எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் அவா் கையறு நிலையில் இருக்கிறாா் என்று கருதுகிறேன். ஒரு சிலரின் பேச்சை கேட்டுக்கொண்டு முதல்வா் எடியூரப்பா செயல்படுகிறாா்.
பிரதமா் மோடி வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வந்தாலும், கா்நாடகத்தில் அதற்கு நோ்மாறாக நடந்து வருகிறது. முதல்வா் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா எம்.பி.யாக இருந்தால், இளையமகன் விஜயேந்திரா நிழல் முதல்வராக இருக்கிறாா். அவரது மருமகன்கள், நெருங்கிய உறவினா்கள் அதிகாரத்தில் வீற்றிருக்கிறாா்கள் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

