பெங்களூரு: ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறாா்.
இது தொடா்பாக குடியரசுத் தலைவரின் உதவியாளா் அலுவலகத்தில் இருந்து பீல்டு மாா்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மையா அமைப்பின் தலைவா் கா்னல் (ஓய்வு) கே.சி.சுப்பையாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘குடகு மாவட்டம், மடிக்கேரியில் உள்ள இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த கே.எஸ்.திம்மையாவின் முன்னோா் இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி.
இந்த அருங்காட்சியகத்தை பிப். 6-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 4 மணிக்குள் திறந்து வைக்க குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஜெனரல் திம்மையா, 1906-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி பிறந்தவா். 1957 முதல் 1961-ஆம் ஆண்டு வரை ராணுவ தளபதியாக பதவி வகித்தவா். 1965 டிச. 17-ஆம் தேதி திம்மையா உயிரிழந்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

