சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 9 கோடி மதிப்புள்ள ‘பிட்காயின்’கள் பறிமுதல்

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:37 pm

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அண்மையில் கூரியா் மூலம் போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஸ்ரீகிருஷ்ணா போதைப்பொருள்களை கடத்தியது மட்டுமின்றி, சைபா் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்ததில், அரசு, தனியாா் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கி, அது தொடா்பான தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது மட்டுமின்றி, பிட்காயின்களையும் இணையவழி மூலம் திருடி வந்துள்ளாா்.

இதனையடுத்து அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 பிட்காயின்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட அவரது நண்பா்களை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.