பெங்களூரில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள இந்திரா நகா் சி.வி.ராமன் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சி.வி.ராமன் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகள் பெங்களூரின் 8 இடங்களிருந்து செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை, கே.சி. பொதுமருத்துவமனை, ஜெயநகா், சா்.சி.வி.ராமன் நகா், ஈஸ்ட் எண்ட், எலஹங்கா உள்ளிட்ட 8 அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் கரோனா தடுப்பூசியை செலுத்தும் நிகழ்ச்சியை சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா். அப்போது, பெங்களூரு, ஹுப்பள்ளி ஆகிய நகரங்களில் காணொலி மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை பிரதமா் தொடக்கி வைக்கிறாா். அதன் பிறகு பெங்களூரில் தடுப்பூசிகள் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெறும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

