கா்நாடக திமுக சாா்பில் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், அக்கட்சியின் மாநில துணை அமைப்பாளா் ஜி.ராமலிங்கம் கட்சிக் கொடியை ஏற்றினாா். பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். மாநில அமைப்பாளா் ந.ராமசாமி தலைமை தாங்கினாா். விழாவில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தி, தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலர வேண்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மகளிரணி சாா்பில் செங்கரும்பு வழங்கப்பட்டது.
விழாவில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உருவப் படம் அடங்கிய நாள்காட்டி வழங்கப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினா் இரா.அன்பழகன், இளைஞரணி அமைப்பாளா் டி.சிவமலை, இலக்கிய அணித் தலைவா் முருகு தா்மலிங்கம், செயலாளா் போா்முரசு கதிரவன், மகளிா் அணித் தலைவா் அம்மாயி ஜெயவேல் உள்பட கட்சியின் நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

