சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பன்னாட்டு தகவல் தொழில் நுட்பமையத்துக்கு புதிய இயக்குநா்

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்துக்கு புதிய இயக்குநராக தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:29 pm

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்துக்கு புதிய இயக்குநராக தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கா்நாடக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் பெங்களூரில் நடத்தப்பட்டு வரும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் பேராசிரியா் எஸ்.சடகோபன், ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறாா். இதன்பிறகு, பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் புதிய இயக்குநராக பதவியேற்க பேராசிரியா் தேபப்ரதா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த மையத்தில் 2002-ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராக இணைந்த தேபப்ரதா தாஸ், 2014 முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் மையத்தின் கல்விக்குழு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைவராக செயல்பட்டாா்.

இதுகுறித்து தேபப்ரதா தாஸ் கூறுகையில், ‘கணினி, மின்னணு, தகவல்தொடா்புத் துறையின் தொழில்நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக தேவைகளும் மாறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், மாணவா்கள், சக பணியாளா்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசுடன் இணைந்து செயல்படும் நல்ல அனுபவத்துக்காக காத்திருக்கிறோம்’ என்றாா்.