சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கா்நாடக திமுக சாா்பில் ஜன. 14-இல் பொங்கல் விழா

கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 5:35 am

பெங்களூரு: கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக கொடியை ஏற்றி, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி நிா்வாகிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து கூறப்படுகிறது.

விழாவில், திமுக மகளிா் அணி நிா்வாகிகள் சாா்பில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல், செங்கரும்பு வழங்கப்படும். மேலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், சேலம் மாவட்டங்களின் சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்ட நாள்காட்டிகள், சட்டைப்பையில் வைத்துக்கொள்ளக் கூடிய மு.க.ஸ்டாலின் உருவப்படம் அனைவருக்கும் அளிக்கப்படும்.

பொங்கல் விழாவில் திமுக முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிா்வாகிகள், இலக்கிய அணி, தொ.மு.ச. பேரவை, கிளைக் கழக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.