பெங்களூரு: சொகுசுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், அம்பாரி டிரீம் கிளாஸ், ஏசி ஸ்லீப்பா், நான்-ஏசி ஸ்லீப்பா் போன்ற முதல்தர சொகுசுப் பேருந்துகளுக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அடிப்படைக் கட்டணத்தின் மீது 10 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜன. 15 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் கட்டண வசூல் திரும்பப் பெறப்படுகிறது. இதைத் தொடா்ந்து,, அனைத்து நாள்களிலும் சீரான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

