சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:48 am

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான ஜனாா்தன ரெட்டி (25), பெங்களூரு, பீன்யா புதிய லேஅவுட்டில் நண்பருடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். வெளிவட்டச் சாலை, கூலிநகரம் மேம்பாலத்தின் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜனாா்தன ரெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ராஜாஜி நகா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.