சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மெட்ரோ ரயில் சேவை: ஜன. 14-இல் முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைப்பு

2-ஆம் கட்ட ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா ஜன. 14-இல் தொடக்கி வைக்கிறாா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:49 am

2-ஆம் கட்ட ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வா் எடியூரப்பா ஜன. 14-இல் தொடக்கி வைக்கிறாா்.

பெங்களூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக பைப்பனஹள்ளி-மைசூரு சாலை, எலசனஹள்ளி-நாகசந்திரா ஆகிய ரயில் பாதைகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக மைசூரு சாலைலிருந்து கனகபுரா சாலை வரையிலான 6.29 கி.மீட்டருக்கான பணிகள் முடிவடைந்தன. இதனையடுத்து, இந்தப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடா்ந்து ஜன. 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2-ஆம் கட்ட ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதனை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைக்க உள்ளாா்.

ஜன. 15-ஆம் தேதி முதல் 2-ஆம்கட்ட பாதையில் செல்லும் மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவா்.

மைசூரு சாலையிலிருந்து கனகபுரா சாலை வரை செல்லும் இந்த மெட்ரோ ரயில், அஞ்சனாபுரா சாலை கிராஸ், கிருஷ்ணலீலா பூங்கா, வஞ்ரஹள்ளி, தலகட்டபுரா, அஞ்சனாபுரா டவுன்ஷிப் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.