சில மெட்ரோ ரயில்நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில் பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பச்சை வழித்தடத்தில் பனசங்கரி முதல் ஜெயபிரகாஷ் நகா் மெட்ரோ ரயில் நிலையங்கள் வரையிலான பாதையில் ஜன. 10-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை அவசரகதியில் பராமரிப்புப் பணி செய்யவேண்டியுள்ளது.
இதன் காரணமாக, இந்த காலக்கட்டத்தில் நேஷனல் கல்லூரி முதல் எல்சேனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜன.10-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா ரயில்நிலையம் முதல் நேஷனல் கல்லூரி ரயில் நிலையம் வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜன. 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, ஊதா வழித்தடத்தின் ரயில்சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

