பறவைக் காய்ச்சலைத் தடுக்க மாநில எல்லையில் வாகனங்கள் சோதனை செய்யப்படும் என கா்நாடக துணை முதல்வா் லட்சுமண் சவதி தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லையில் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். சோதனைக்கு வாகன ஓட்டிகள், உரிமையாளா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக, அண்டை மாநிலங்களிலிருந்து கோழிகளைக் கொண்டுவரும் வாகனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
கா்நாடக மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. பறவைக் காய்ச்சலைத் தடுக்க கால்நடைத் துறை தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துறையுடன், போக்குவரத்துத் துறையும் இணைந்து பறவைக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான ஒத்துழைப்பு வழங்கும்.
கரோனா பாதிப்பால் ஏற்கெனவே மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கரோனா, பறவைக் காய்ச்சலால் மேலும் பாதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

