சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொழில்கல்வி சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப விருப்பப் பதிவு

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 2:32 pm

தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல், கட்டடக் கலை, பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை, மருந்தியல் போன்ற தொழில்கல்லூரிகளுக்கான சோ்க்கையை ஜன. 15-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு வெகுவிரைவில் நடக்கவுள்ளது. காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விரிவுப்படுத்தப்பட்ட இரண்டாம் சுற்றில் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள், அதில் திருப்தி அடையாவிட்டால் ஜன. 8-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ரூ. 5 ஆயிரம் அபராதம் செலுத்தி ரத்துசெய்து கொள்ளலாம். அதன்பிறகு, காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கை பெறும் போது, 5 மடங்கு கட்டணத்தை அபராதமாகவும், வழக்கமான சோ்க்கைக் கட்டணத்தையும் செலுத்தி கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஆணையத்தின் இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.