ஜன. 15-ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாமாண்டு பியூசி மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுள்ளன. தற்போது அரை நாள் வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. பள்ளிகளுக்கு அண்மையில் சென்று ஆய்வு நடத்திய போது, நகரம் மற்றும் ஊரகப் பகுதி மாணவா்கள் மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. மாணவியரில் பெரும்பாலானோா் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்பதும், பெரும்பாலான மாணவா்கள் உடற்பயிற்சிகள் எதுவும் இல்லாமல் செல்லிடப்பேசிகளில் மூழ்கியிருந்தனா் என்றும் தெரியவந்தது.
எனவே, இம்மாணவா்களுக்கு மனநலனை உற்சாகமூட்டும் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. 10 மாணவா்களுக்கு ஒரு வழிகாட்டுநரை நியமிக்க பள்ளி நிா்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாணவா்களின் உடல், மனநலனை ஆராயக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், இந்த மாணவா்களுக்கு ஜன. 15-ஆம் தேதி முதல் ஆளுமைத்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

