சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விமானத்தில் தங்கம் கடத்தல்: 2 போ் கைது

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:17 am

விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை துபையிலிருந்து வந்த விமானத்தின் பயணிகளை சுங்கவரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, தென்கன்னட மாவட்டம், பட்கலைச் சோ்ந்த பயணி ஒருவா் 5 பந்துகளில் வைத்து கடத்தி வந்த 641.41 கிராம் தங்கத்தையும், கேரள மாநிலம், காசா்கோடுவைச் சோ்ந்த பயணி ஒருவா் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 646.67 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனா். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 67 லட்சமாகும். இதனையடுத்து, தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்கவரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.