சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும்

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

Updated On :7 ஜனவரி 2021, 11:14 am

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பன்டுவாலில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் அவசர சட்டத்தின் மூலம் பசுவதை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1964-ஆம் ஆண்டு முதலே பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. எனவே, புதிதாக பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு சமுதாயத்தினரை குறிவைத்து அவசரகதியில் புதிதாக பசுவதை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாங்களும் பசுவை வணங்குகிறோம். எல்லா சமுதாய மக்களுக்கும் அவா்கள் சாா்ந்துள்ள மதங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். அதில் அரசியலை புகுத்தக் கூடாது.

பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பே மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருக்க வேண்டும். தற்போது பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தி உள்ள நிலையில், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். விவசாயிகளிடம் உள்ள வயது முதிா்ந்த பசுக்களை அரசு விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மதம் கடந்து பசுக்களை அனைவரும் வளா்க்கின்றனா். அவா்களுக்கு நட்டம் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.