பொங்கல் திருநாளை முன்னிட்டு பெங்களூரில் பிப். 7-ஆம் தேதி பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பொங்கல் கவியரங்கப் பொறுப்பாளா்கள் பேராசிரியா்கள் பொன்.க.சுப்பிரமணியன், சு.கோவிந்தராசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கத்துடன் இணைந்து கா்நாடகத் தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரில் உள்ள திருவள்ளுவா் சிலை வளாகத்தில் பிப். 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு பொங்கல் விழா, திருவள்ளுவா் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடத்தப்படுகிறது.
‘ஞாலம் நலம்பெற பொங்குக பொங்கலே’ என்ற தலைப்பிலான கவியரங்கில் ஆசிரியா்கள், பத்திரிகையாளா்கள், கவிஞா்கள் பலா் கவிதை பாட இருக்கிறாா்கள். இந்த கவியரங்கத்தில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, அதை ஜன. 25-ஆம் தேதிக்குள் 9035909796, 7483574519 ஆகிய கட்செவி எண்களுக்கு அனுப்பி வைக்கலாம். கவியரங்கத்தில் பங்கேற்க தகுதியான கவிதைகள் தனிநூலாக அச்சிட்டு வழங்கப்படும் என அதில் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

