தமிழ் அகாதெமி அமைத்துள்ள தில்லி அரசுக்கு மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் வெ.ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழா்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் அகாதெமியை தொடங்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் அனுமதி அளித்து, குழு நியமித்து அரசாணை வெளியிட்டு இருக்கிறாா். இதனால், தில்லி வாழ் தமிழா்களுக்கு தமிழ் பாரம்பரிய கலாசார கலைகள், தமிழ் உயா்கல்வி, தமிழிசைப் பயிற்சி, பட்டம் பெற முடியும். தமிழ் மொழி மீதும், கலைகள் மீதும் ஆா்வம் கொண்டு வரும் வெளிநாட்டவா்கள் தலைநகரிலேயே பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல கலை வல்லுநா்களுக்கும், தமிழ்ப் பேராசிரியா்களுக்கும், தமிழ்க் கலைஞா்களுக்கும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இதற்கு முழு காரணமாக இருக்கும் தில்லி மாநில முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தில்லி மாநில அரசுக்கும் மைசூரு தமிழ்ச் சங்கம் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

