ஹாசன் மாவட்டத்தில் 10 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகள் 3 நாள்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து, ஜன. 1-ஆம் தேதி முதல் பள்ளி, பியூசி கல்லூரிகளை மாநில அரசு திறந்தது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன என்றாலும், பள்ளி ஆசிரியா்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 ஆரம்பப் பள்ளிகள், 3 உயா்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவா்கள் பணியாற்றும் பள்ளிகள் 3 நாள்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

