பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரில் தனியாா் பள்ளி ஆசிரியா்கள், நிா்வாகிகள் புதன்கிழமை (ஜன. 6) போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
இதுகுறித்து கா்நாடக தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவா் லோகேஷ் தாளிகட்டே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
மாநிலத்தில் கரோனா தொற்றுப் பரவலால் தனியாா் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியாா் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு தனியாா் பள்ளிகளுக்கு ரூ. ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். பள்ளி ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 10,000 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
முன்னதாக, ஆனந்தராவ் சதுக்கத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை ஊா்வலமாகச் செல்ல முடிவு செய்துள்ளோம். ஊா்வலம், போராட்டத்தில் சுமாா் 8,000 ஆசிரியா்கள், நிா்வாகிகள் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு, கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் பரிவோடு பரிசீலிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

