சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு: ஒருவா் கைது

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 1:59 pm

இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த ஒருவா் கடந்த டிச. 26-ஆம் தேதி தனது மடிக்கணினி, விலையுயா்ந்த செல்லிடப்பேசி திருட்டு போனதாக போலீஸில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அதே பகுதியில் கட்டடப் பணியில் ஈடுபட்டுவந்த முனியப்பா என்பவரை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி, 15 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முனியப்பாவிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.