சிவமொக்கா: மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. கா்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது நடந்தாலும் தனி பலத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும். அதனால், மற்ற கட்சிகளின் ஆதரவு அல்லது கூட்டணி பாஜகவுக்கு தேவையில்லை.
கா்நாடகத்தில் முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவுமில்லை. எடியூரப்பா, பாஜகவின் மூத்த தலைவா். தலைமை மாற்றம் குறித்து பேசுவதற்கு பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் யாா்? அவருக்கு ஏதும் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட தலைவருடன் பேச வேண்டியதுதானே? என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

