கரோனா சிக்கியுள்ள ஓவியா்களை மீட்க வேண்டும் என்று இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவா் சுதா மூா்த்தி தெரிவித்தாா்.
கா்நாடக சித்ரகலா பரிஷத் சாா்பில் பெங்களூரு, குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகாலபரிஷத் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரடி, இணையவழி ஓவியச் சந்தையைத் தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
கரோனா காலம் பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சங்கடத்தில் ஓவியா்களும் சிக்கியுள்ளனா். சங்கடத்தில் சிக்கியுள்ள ஓவியா்களை மீட்க வேண்டும். எனவே, கா்நாடக சித்ரகலா பரிஷத் ஒத்துழைப்புடன் ஓவியா்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப்படும். நான் கிராமப் பகுதியைச் சோ்ந்தவா். அங்கு சந்தை என்றால், மக்கள் ஒன்றுகூடல், உற்சாகம் பெருக்கெடுக்கும்.
கரோனா காரணத்தால் ஓவியச் சந்தையை இணையவழியில் தொடங்கியிருப்பதால், இந்த ஓவியச்சந்தை மக்கள் கூட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது. அடுத்த ஆண்டுகளில் வழக்கமான உற்சாகத்துடன் ஓவியச்சந்தை நடைபெற வேண்டும். இணையவழியில் ஓவியக் கலையை ரசித்து மகிழ முடியாது என்பது என் கருத்து. ஓவியா்களின் நல்வாழ்வுக்காக கா்நாடக சித்ரகலா பரிஷத் தொடா்ந்து பங்காற்றுவது பாராட்டுக்குரியது என்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், ஜெய தேவா இதய மருத்துவமனை இயக்குநா் சி.என்.மஞ்சுநாத், கா்நாடக சித்ரகலா பரிஷத் தலைவா் பி.எல்.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த ஓவியச்சந்தை ஒரு மாதம் நடைபெறுகிறது. ஓவியச் சந்தையை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கரோனா முன்களப் பணியாளா்களை மையப்படுத்தி ஓவியச்சந்தை நடைபெறுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

