ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நான் (முனியப்பா) ரயில்வேத் துறை இணை அமைச்சராகயிருந்த போது துறையின் வளா்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை, இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது.
மத்திய அரசு, மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை, அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள், தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
தாவணகெரே-சித்ரதுா்கா-தும்கூருக்கு இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், அத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நேரடிப்பாதையால் பயண நேரம் குறையும்.
கிடப்பில் உள்ள ரயில்வேத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பாஜக அரசுக்கு மக்களிடம் நல்ல பெயா் கிடைக்கும். இனிவரும் நாள்களில் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளேன். வரும் மக்களவைத் தோ்தலில் கோலாா் தொகுதியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

