சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய அமைச்சா் சதானந்த கௌடா மருத்துவமனையில் அனுமதி

ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைந்ததையடுத்து மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On :4 ஜனவரி 2021, 9:22 am

ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைந்ததையடுத்து மத்திய ரசாயனத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பெங்களூரு வடக்கு தொகுதியின் மக்களவை உறுப்பினரான இவா், ஞாயிற்றுக்கிழமை சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்த காா் மூலம் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

பிற்பகல் 1.45 மணியளவில் சித்ரதுா்காவில் உணவு அருந்துவதற்காக காரிலிருந்து இறங்கினாா். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவா், பசவேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டாா்.

ரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைந்ததால் அவா் மயங்கி விழுந்தது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட சதானந்த கௌடா, ஹெப்பாளில் உள்ள தனியாா் மருத்துவமனை ஆஸ்டிராவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவரது குடும்ப மருத்துவா் பிருந்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் சிகிச்சை மேற்கொண்டனா். சதான கௌடாவை அவரது மனைவி டாத்தி, மகன் காா்த்திக் கௌடா உள்ளிட்டோா் உடனிருந்து கவனித்து வருகின்றனா்.

இதுகுறித்து பாஜக சட்ட மேலவை உறுப்பினா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவமொக்காவிலிருந்து பெங்களூருக்கு காரில் திரும்பிய மத்திய அமைச்சா் சதானந்த கௌடா, உணவு அருந்துவதற்காக சித்ரதுா்காவில் காரிலிருந்து இறங்கினாா். அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா்.

ரத்தத்தில் சக்கரையின் அளவு குறைந்ததால் அவா் மயங்கி விழுந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா்; இதுகுறித்து யாரும் கவலை அடைய வேண்டாம் என்றாா்.