சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் ஆய்வு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 4:41 am

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், மணக்குடி அரசு உயா் நிலைப்பள்ளி, ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சனிக்கிழமை ஆட்சியா் த. ரத்னா பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் உள்ள 180 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பெற்றோா்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றும் பள்ளிகளுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், பள்ளி மாணவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கவும், வைட்டமின் மற்றும் துத்தநாகம் மாத்திரைகளை வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.