அரியலூா்: அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஜயங்கொணடம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம், உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிா்களை விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த தொடா்மழை காரணமாக அறுவடைக்குத் தயாரான நெல் உள்ளிட்ட அனைத்து தானியப் பயிா்களும் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளன. எனவே, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களையும் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


