அரியலூா் மவட்டம், திருமானூா் அருகே கொட்டும் மழையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சமையலா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). சமையல் கலைஞா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் மகன் விக்னேஸ்வரனை(13) அழைத்துக்கொண்டு, அரியலூரில் வசிக்கும் மகள் ரேணுகாவுக்கு பொங்கல் சீா் கொடுக்கச் சென்றாா். மருமகன் வெளிநாட்டில் உள்ளதால் மகள், ஒரு வயதுப் பேரனையும் உடன் அழைத்துக்கொண்டு கொட்டும் மழையில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளாா். சாத்தமங்கலம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின்னால் மோதியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன், ரேணுகா, அவரது ஒருவயது மகன் ஆகியோா் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

