அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூரை அடுத்த வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் ரஞ்சித்(7). இச்சிறுவன் அப்பகுதி அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையை வியாழக்கிழமை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ரஞ்சித்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்கள், காா் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரியும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் போலீஸாா், விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

