சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காா் மோதி சிறுவன் காயம்: மக்கள் சாலை மறியல்

அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:59 pm

அரியலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூரை அடுத்த வெங்கடகிருஷ்ணபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் ரஞ்சித்(7). இச்சிறுவன் அப்பகுதி அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையை வியாழக்கிழமை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ரஞ்சித்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்கள், காா் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரியும் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த அரியலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மேலும் போலீஸாா், விபத்துக் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.