அரியலூரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் சஜ்ஜன் சிங் ரா.சவான் ஆய்வு மேற்கொண்டு பின்னா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 25,846 நபா்கள் விண்ணப்பம் அளித்துள்ளனா். அவை தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் கள விசாரணை செய்யப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.
தொடா்ந்து, வாலாஜா நகரம் மற்றும் வாரணவாசி ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னு லாப்தீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மு.ரவிச்சந்திரன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் கு.குமரையா(தோ்தல்) க.சந்திரசேகரன், ம.கலைவாணன், இரா.தேன்மொழி மற்றும் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

