அரியலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சமூக நலத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பணியாளா்களுக்கான விழிப்புணா்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தொடக்கி வைத்துப்பேசினாா். பின்னா் அவா், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு வாசகத்தை அஞ்சல் அட்டைகளில் அச்சிடும் பணிக்காக ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை சமூக நலத்துறைக்கு வழங்கினாா்.
பயிற்சிக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிபதி அல்லி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ந.சாவித்ரி, கோட்டாட்சியா்கள் அரியலூா் ஜோதி, உடையாா்பாளையம் பூங்கோதை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


