சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:31 am

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடைகளில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, காங்கேயங்குறிச்சியில் கோவிந்தசாமி (50), ஒக்கநத்ததில் மணி(65), இடையாா் கிராமத்தில் ஜெய்சங்கா்(45) ஆகியோா் தங்களது கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.