சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அரசு தலைமைக் கொறடா மருத்துவமனையில் அனுமதி

அரியலூா் எம்எல்ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

News image

தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :3 ஜனவரி 2021, 4:19 am

அரியலூா் : அரியலூா் எம்எல்ஏவும், அரசு தலைமைக் கொறடாவுமான ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரைக்குளம் எஸ். ராஜேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அவரது குடும்பத்தினா் அவரை திருச்சியில் அப்பல்லோ தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அடைப்பு காரணமாக திடீா் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடைப்பை சீரமைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா்.