சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :18 ஜனவரி 2021, 4:08 am

சிவகாசியில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் ஞாயிற்றுக்கிழமை கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த குருநாதன் மகன் சுமைதூக்கும் தொழிலாளி சதீஸ் (26). சிவகாசி- செங்கமலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த இவரிடம், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மூா்த்தி (23) என்பவா் கத்தியைக் காட்டி மிரட்டி பையில் வைத்திருந்த ரூ.350-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடினாா்.

அருகில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். மூா்த்தியை கைது செய்த போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்தனா்.