நீங்கள் கடமையின் நெறியைக் கடைப்பிடியுங்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
-பகவான் புத்தர்
ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜபம், தியானம் முதலியவைகளைச் செய்பவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரமாகமாட்டார்கள். அவர்களை ஆன்மவிளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கக் கூடாது.
- வள்ளலார்
நாம் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அறம் ஒன்றுதான் நம்முடன் மறுவுலகிலும் நல்ல நண்பனாகத் தொடர்ந்து வருகிறது; மற்றவை எல்லாம் சரீரத்தோடு நாசமாகிவிடுகின்றன.
-பஞ்சதந்திரம்
வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறவி இல்லாமல் இருப்பதற்கு உரிய நல்ல வழி, இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.
-மயான யோகியார்
உனக்கு முக்தியில் விருப்பம் இருக்குமானால்,
புலனின்பத்தை விஷம் போன்று வெகு தூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிடு. திருப்தி, இரக்கம், பொறுமை, நேர்மை, மனஅமைதி, புலனடக்கம் ஆகியவற்றை எப்போதும் பரிவுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
-விவேகசூடாமணி
சாஸ்திரங்களில் இருக்கும் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்; பெரியோர்களின் கொடுஞ்சொற்கள் நல்வாழ்வை அளிக்கும். அரசனின் கொடிய சொற்களோ போராட்டத்தை வளர்க்கும்.
-கெளடில்யர்
பெருந்தன்மை உடையவர்கள், மிகவும் நல்ல புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியவர்கள் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள். உள்ளத்தில் அன்பு பெருக்கற்றவன் நீரற்ற மேகத்திற்கும், பழமற்ற மரத்திற்கும், பாலற்ற பசுவுக்கும் சமமானவன்.
-ராமாயணம்
நமக்கு மிகவும் பிரியமான விஷ்ணு திருத்தலம்
திருநாராணபுரத்தில் ஒரு கூரைவீடாகிலும் கட்டிக்கொண்டு அதில் வாசம் செய்யுங்கள். அது முடியாத பட்சத்தில், அர்த்தத்துடன் த்வயமந்திரத்தை ஜபம் செய்தபடியே நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள்.
-ஸ்ரீ ராமானுஜர்
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

