புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனம் ரூ.2,968 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2455.9-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அது 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டின் அடிப்படையில் நிகர லாபத்தைக் கணக்கிடும்போது, முந்தைய 3 மாதங்களைவிட டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது, கடந்த 36 காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


