திருப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள கோவில்வழி அருகே ஊரக காவல் துறையினா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஏடிஎம் மையம் முன்பாக கல்லுடன் ஆண் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.
அவரை காவல் துறையினா் பிடித்து விசாரித்ததில் அவா் கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (40) என்பதும், தனது குடும்பத்துடன் 4 நாளுக்கு முன்பாக இடுவம்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.
மேலும், தேவேந்திரன் திண்டுக்கல் செல்வதற்காக கோவில்வழிக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். இதில், மது போதையில் அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று இயந்திரத்தை கல்லால் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூா் ஊரக காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

