சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிறந்து 10 நாள்களேயான கைக்குழந்தையுடன் உடல்தகுதி தேர்விற்கு வந்த இளம் பெண்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி செவ்வாய்க்கிழமை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

News image

<div class="paragraphs"><p>உடல்தகுதி தேர்விற்கு வந்த இளம் பெண். </p></div>

Updated On :6 பிப்ரவரி 2024, 7:26 pm

கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், குழந்தை பிறந்து பத்து நாட்களேயான தனது கைக்குழந்தையுடன் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் ஆவலுடன் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி செவ்வாய்க்கிழமை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

<div class="paragraphs"><p>உடல் தகுதித் தேர்வுக்கு காத்திருப்போர்</p></div>

<div class="paragraphs"><p>உடல் தகுதித் தேர்வுக்கு காத்திருப்போர்</p></div>

இந்த தேர்வில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்,பெண் இருபாலரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Story image

இந்த நிலையில், குழந்தை பிறந்து பத்து நாட்களேயான தனது கைக்குழந்தையுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் கோவையில் நடைபெறுகின்ற இரண்டாம் நிலைக் காவலர் பணிக்தான உடல் தகுதி தேர்வில் ஆவலுடன் கலந்துகொண்டார்.