மாநாடு முடியும் நாளன்று எலிசபெத் ராணி எல்லாத் தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். இவர்களெல்லாம் தங்கள் அடிமை நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் ராணியிடம் இருந்திருக்க வேண்டும். அவர் எல்லாத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் "மகா கனம் பொருந்திய எலிசபெத் ராணி அவர்கள் உங்களை சந்திக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்' என்ற பொருள்பட இருந்தது அந்தக் கடிதம்.
கடிதத்தின் அதிகாரத் தொனியை இந்திரா காந்தி சற்றும் விரும்பவில்லை. உடனே அவர் ஒரு கடிதம் எழுதி ராணிக்கு அனுப்பி வைத்தார்.
"இந்தியாவின் பிரதமர் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்' என்று. இக்கடிதம் தலைவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இங்கிலாந்து அரசி பழைய கடிதத்தைத் திரும்பப் பெற்று, "ராணி உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவார்' என்ற வாசகத்தை மாற்றிக் கடிதம் அனுப்பினார்.
ஒரு காலத்தில் எங்கள் நாடு உங்களுக்கு அடிமையாக இருந்தது. இப்போது அல்ல என்று சொல்லாமல் சொல்லி, ஆங்கிலேயர்களின் எண்ணத்தை அடக்கிய, இந்தக் கடிதத்தை சரித்திரப் புகழ் வாய்ந்தது என்று கூறுவர்.
"இந்திராகாந்தியின் சாதனைகள்' எனும் நூலிலிருந்து.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

