சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அவசர சிகிச்சை மேல் மாடியில் உள்ள எலும்பு முட்டு அறுவை சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.
பயங்கர புகையுடன் தீ பரவியதால் பணியில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உள்நோயாளிகள் அனைவரையும் அதிரடியாக வெளியேற்றி அவசர அவசரமாக வேறு வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அறை முழுவதும் புகைமூட்டம் காணப்படுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
எலும்பு முட்டு சிகிச்சை பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்
தீ விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள குளிர்சாதனத்திலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


