எடப்பாடி: மாவட்ட காவல் துறை எச்சரிக்கையை அடுத்து எடப்பாடி சுற்றுப் பகுதிகளில் தை பொங்கல் விழாவையொட்டி நடைபெறும் எருதாட்ட நிகழ்வு ரத்துசெய்யப்பட்டது.
எருதாட்டம் நடைபெறாத நிலையில், அப்பகுதி விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி கோயில் வாசலில் காளைகளுக்கு பூஜை செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
எடப்பாடியை அடுத்துள்ள வேம்பனேரி பகுதியில், ஆண்டுதோறும் நடைபெறும் எருதாட்ட நிகழ்வில் சுற்றுப்புறக் கிராமப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோயில் திடலில், ஆண்டுதோறும் தை பொங்கலையொட்டி, எருதாட்ட நிகழ்ச்சி நடைபெறும்.
கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாவட்ட நிா்வாகம், இப்பகுதியில் எருதாட்ட நிகழ்விற்கு அனுமதி அளிக்காத நிலையில், அப்பகுதி விவசாயிகள் சனிக்கிழமை ஒரு சில காளைகளை கோயில் வாசலில் நிறுத்தி பூஜைசெய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

