சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறையினா் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On :18 ஜனவரி 2021, 4:40 am

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறையினா் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கூட்டமைப்பினா் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வால்பாறைக்கு சமீப காலமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வரும் வழியில் உள்ள ஆழியாறு சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.30ம், தலநாா் பகுதிக்கு செல்ல ரூ.150ம், சின்னக்கல்லாறு அருவிக்கு செல்ல ரூ.150ம், நல்லமுடி காட்சிமுனைக்கு ரூ.30 என ஒரு சுற்றுலாப் பயணியிடம் ரூ.360 வரை கட்டணமாக வசூலித்து வருகின்றனா்.

இந்தக் கூடுதல் கட்டணம் காரணமாக தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிா்த்து வருகின்றனா். எனவே வனத் துறை அதிகாரிகள் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.